9 14
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழ்நாடு பாம்பனில் இலங்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்

Share

தமிழ்நாடு பாம்பனில் இலங்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்

எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 35 கடற்றொழிலாளர்களையும் மத்திய அரசு உடனடியாக விடுவிக்கக் கோரி பாம்பனில் நாட்டுப்படகு கடற்றொழிலாளர் சங்கம், நேற்றுமுதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ள சங்கத் தலைவர் எஸ்.பி. ராயப்பன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பிற தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்திய அரசாங்கம், சம்பவங்கள் தொடர்பில் தமது எதிர்ப்பை இலங்கையிடம் வெளியிட்ட பின்னரும், புதிய சம்பவங்கள் கடற்றொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது மத்திய அரசு ஆதரவளித்து, நாட்டை விட்டு வெளியேறிய மக்களுக்கு தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் நேரத்தில், தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் நடத்துவது நியாயமற்றது மற்றும் துரதிஸ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...