9 14
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழ்நாடு பாம்பனில் இலங்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்

Share

தமிழ்நாடு பாம்பனில் இலங்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்

எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 35 கடற்றொழிலாளர்களையும் மத்திய அரசு உடனடியாக விடுவிக்கக் கோரி பாம்பனில் நாட்டுப்படகு கடற்றொழிலாளர் சங்கம், நேற்றுமுதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ள சங்கத் தலைவர் எஸ்.பி. ராயப்பன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பிற தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்திய அரசாங்கம், சம்பவங்கள் தொடர்பில் தமது எதிர்ப்பை இலங்கையிடம் வெளியிட்ட பின்னரும், புதிய சம்பவங்கள் கடற்றொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது மத்திய அரசு ஆதரவளித்து, நாட்டை விட்டு வெளியேறிய மக்களுக்கு தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் நேரத்தில், தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் நடத்துவது நியாயமற்றது மற்றும் துரதிஸ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...