9 14
இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழ்நாடு பாம்பனில் இலங்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்

Share

தமிழ்நாடு பாம்பனில் இலங்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்

எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 35 கடற்றொழிலாளர்களையும் மத்திய அரசு உடனடியாக விடுவிக்கக் கோரி பாம்பனில் நாட்டுப்படகு கடற்றொழிலாளர் சங்கம், நேற்றுமுதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ள சங்கத் தலைவர் எஸ்.பி. ராயப்பன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பிற தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்திய அரசாங்கம், சம்பவங்கள் தொடர்பில் தமது எதிர்ப்பை இலங்கையிடம் வெளியிட்ட பின்னரும், புதிய சம்பவங்கள் கடற்றொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது மத்திய அரசு ஆதரவளித்து, நாட்டை விட்டு வெளியேறிய மக்களுக்கு தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் நேரத்தில், தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் நடத்துவது நியாயமற்றது மற்றும் துரதிஸ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...