7 10
இலங்கைசெய்திகள்

அதிரும் தமிழக திரைத்துறை..! தொடரும் கைது நடவடிக்கைகள்

Share

தென்னிந்திய திரைத்துறையில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பில் மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், தென்னிந்திய திரைத்துறையில், போதைவஸ்து பாவனை தொடர்பில், பல முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சர்வதேச போதைப்பொருள் விநியோகஸ்தர் என்று கருதப்படும் சென்னையை சேர்ந்த, கெவின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் திடுக்கீடும் தகவல்களை வழங்கியுள்ளார்.

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பில், நடிகர் கிருஸ்ணா அத்துடன் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதில், தாம் முழு நேர தொழிலாக ஐஸ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கெவின், விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தமக்கு ஜெய்வீர் என்ற புனைப்பெயர் இருப்பதாக கூறியுள்ள அவர், தென்னிந்திய திரைத்துறையினர் தம்மை பவுடர் ஜெஸ்வீர் என்றே அழைப்பர் என்றும் கெவின் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நடிகர் – நடிகையரை விட, சினிமா பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்களே தமது வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்றும் போதைப்பொருள் விநியோகஸ்தரான கெவின் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நடிகர் – நடிகையர் பிறந்த நாள் நிகழ்வுகள், படங்களின் வெற்றி விழா கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளுக்காகவும் தாம் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நெருங்கிய நண்பரான நடிகர் கிருஸ்ணா அடிக்கடி அவரது நண்பர்களுக்கு விருந்து வழங்குவார் என்றும் போதைப்பொருள் விநியோகஸ்தரான கெவின் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இரவு நேர தூக்கம் தொலைத்து பணிபுரியும் மென்பொருள் நிறுவன ஊழியர்களும், கொக்கைன் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் கொக்கைனை விற்றுள்ளதாக கெவின் தகவல் வழங்கியுள்ளார்.

இந்தநிலையில், கெவின் வழங்கியுள்ள இந்த வாக்குமூலம் தற்போது தென்னிந்திய திரைத்துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் காலத்தில் பல நடிகர்கள், இயக்குநர்கள் விசாரணைகளுக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...