7 17
இலங்கைசெய்திகள்

தமிழரசுக்கட்சி எம்.பி சிறீதரன் கனடாவிற்கு பயணம்

Share

தமிழரசுக்கட்சி எம்.பி சிறீதரன் கனடாவிற்கு பயணம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) கனடாவின் (Canada) ஒட்டோவா நோக்கிப் பயணமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய வெளிவிவகார அமைச்சின் (Global Affairs Canada) அழைப்பில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ- பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பை (Weldon Epp) சந்தித்து உரையாடவுள்ளார்.

இந்தச் சந்திப்பு ஒட்டோவாவில் (Ottawa) உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கனடிய பிரதியமைச்சருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் (K. S. Kugathasan) பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள சிறீதரன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...