33 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

சாந்தனின் மரணம்! சிறப்பு முகாம்கள் மூடப்பட வேண்டும்: தமிழீழ அரசாங்கம்

Share

சாந்தனின் மரணம்! சிறப்பு முகாம்கள் மூடப்பட வேண்டும்: தமிழீழ அரசாங்கம்

தவறான சிறைவாசத்திற்கு பிறகு 33 வருடங்கள் கழித்து சாந்தன் காலமான நிலையில் அவரது மரணம் பெரும் சோகத்தையும் தார்மீக சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சாந்தனின் மரணம் குறித்து மேலும் தெரிவித்த தமிழீழ அரசாங்கம், “உச்ச நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்ட போதிலும், அவர் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.

மேலும், சிறப்பு முகாமில் தொடர்ந்து சிறைவாசம் என்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல கொடூரமான மற்றும் சட்டவிரோதமான தண்டனையாகும்.

அத்துடன் 33 வருடங்களாக சிறையில் இருக்கும் சிறப்பு முகாம் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களை சிறப்பு முகாமில் தடுத்து வைப்பது சட்டவிரோதமான கொடிய தண்டணையாகும்.

மேலும் சிறப்பு முகாம்கள் உடனடியாக மூடப்படவேண்டும் அத்தோடு சாந்தனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

அத்தோடு அவரை மீண்டும் பார்க்கவும் மற்றும் அணைக்கவும் காத்திருந்த அவரது தாயாருக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு அவரது கரங்களை தோழமை உணர்வுடன் பற்றிக்கொள்கின்றது.

மேலும், அவரது மரணத்திற்கு நீதி கோருகிறது மற்றும் மீதமுள்ள அனைத்து சிறப்பு முகாம் கைதிகளும் இனியும் தாமதங்கள் அல்லது சாட்டுக்கள் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...