33 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

சாந்தனின் மரணம்! சிறப்பு முகாம்கள் மூடப்பட வேண்டும்: தமிழீழ அரசாங்கம்

Share

சாந்தனின் மரணம்! சிறப்பு முகாம்கள் மூடப்பட வேண்டும்: தமிழீழ அரசாங்கம்

தவறான சிறைவாசத்திற்கு பிறகு 33 வருடங்கள் கழித்து சாந்தன் காலமான நிலையில் அவரது மரணம் பெரும் சோகத்தையும் தார்மீக சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சாந்தனின் மரணம் குறித்து மேலும் தெரிவித்த தமிழீழ அரசாங்கம், “உச்ச நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்ட போதிலும், அவர் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.

மேலும், சிறப்பு முகாமில் தொடர்ந்து சிறைவாசம் என்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல கொடூரமான மற்றும் சட்டவிரோதமான தண்டனையாகும்.

அத்துடன் 33 வருடங்களாக சிறையில் இருக்கும் சிறப்பு முகாம் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களை சிறப்பு முகாமில் தடுத்து வைப்பது சட்டவிரோதமான கொடிய தண்டணையாகும்.

மேலும் சிறப்பு முகாம்கள் உடனடியாக மூடப்படவேண்டும் அத்தோடு சாந்தனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

அத்தோடு அவரை மீண்டும் பார்க்கவும் மற்றும் அணைக்கவும் காத்திருந்த அவரது தாயாருக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு அவரது கரங்களை தோழமை உணர்வுடன் பற்றிக்கொள்கின்றது.

மேலும், அவரது மரணத்திற்கு நீதி கோருகிறது மற்றும் மீதமுள்ள அனைத்து சிறப்பு முகாம் கைதிகளும் இனியும் தாமதங்கள் அல்லது சாட்டுக்கள் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...