ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கஹட்டகஸ்திகிலிய, பலுகெடுவெவ பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து ரி – 56 துப்பாக்கி, 3 மகசீன்கள் மற்றும் 184 தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தொகை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது எனவும், அவரைக் கைதுசெய்ய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் பொலிஸார் மேலும் கூறினர்.
#SriLankaNews
Leave a comment