இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் – பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டு! – மருதனார்மடத்தில் சம்பவம்

Share
police
Share

யாழ்ப்பாணம் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இராணுவம் பொலிஸ் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

ஊரடங்கு வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரைக் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்றே குறித்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பழக்கடை வியாபாரி கழுத்து மற்றும் காலில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை தோன்றியது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...