7 2
இலங்கைசெய்திகள்

யாழில் தமிழினி மரணத்தில் சந்தேகம்: விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

Share

யாழில் தமிழினி மரணத்தில் சந்தேகம்: விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

தீயில் கருகி உயிரிழந்த சாவகச்சேரி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சதீஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளராக இருந்த தமிழினி, கடந்த பெப்ரவரி மாதம் 16ம் திகதி தீயில் கருகி உயிரிழந்திருந்தார்.

தற்செயலான தீ விபத்தினால் தன் உடம்பில் தீப்பற்றிக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், அவரது மரணம் விபத்து மரணம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

எனினும் தமிழினியின் தகப்பனார் பீ. சண்முகராஜா, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது கொலையாக இருக்கக் கூடும் என்பதால் மீண்டும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில் நேற்றைய தினம் (01) தமிழினி மரணம் தொடர்பான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...