7 2
இலங்கைசெய்திகள்

யாழில் தமிழினி மரணத்தில் சந்தேகம்: விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

Share

யாழில் தமிழினி மரணத்தில் சந்தேகம்: விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

தீயில் கருகி உயிரிழந்த சாவகச்சேரி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சதீஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளராக இருந்த தமிழினி, கடந்த பெப்ரவரி மாதம் 16ம் திகதி தீயில் கருகி உயிரிழந்திருந்தார்.

தற்செயலான தீ விபத்தினால் தன் உடம்பில் தீப்பற்றிக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், அவரது மரணம் விபத்து மரணம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

எனினும் தமிழினியின் தகப்பனார் பீ. சண்முகராஜா, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது கொலையாக இருக்கக் கூடும் என்பதால் மீண்டும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில் நேற்றைய தினம் (01) தமிழினி மரணம் தொடர்பான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...