செய்திகள்இலங்கை

திருகோணமலையில் புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் கைது

IMG 20211202 WA0041 960x540 1
Share

இன்று காலை திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோன்றிய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 45 இலிருந்து 65 வயது மதிக்கத்தக்க தோப்பூர், கந்தளாய் மற்றும் ஈச்சிலம்பற்றை சேர்ந்தவர்கள் என்று ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெருகல் மாவடிச்சேனை பகுதி வீடொன்றில் புதையல் தோண்டிய போது வெருகல் பகுதி இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஈச்சிலம்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட இடத்திலிருந்து 2 மண்வெட்டிகள், இரண்டு சவல், அலவாங்கு, கேன் போத்தல், தாச்சி, பிக்காசு, பானை மற்றும் இரண்டு சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளும் பொலிஸார் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...