அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி (ITAK) ஆகியன பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக் கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவோம் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று (26) இடம்பெற்ற பின் ஊடக சந்திப்பில் கலந்து காெண்டு கருத்து தெரிவித்த பாேதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள சபைகள் தொடர்பாக ஆராய்ந்தோம்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும் என்று உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கில் ஆட்சி அமைக்க ஆதரவு: சுரேஷ் பிரேமசந்திரன் உறுதி | Suresh Premachandran Speech In Vavuniya
இந்த நேரத்தில் 106 ஆசனங்களை வடக்கு – கிழக்கு பகுதிகளில் பெற்ற ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏனைய தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது எனவும் பல்வேறு சபைகளில் ஏனைய தமிழ் கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக் கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளாேம்.
வடக்கு, கிழக்கில் அதிக ஆசனங்களைக் காெண்டுள்ள தமிழரசுக் கட்சி ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பன ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானித்துள்ளாேம்.
இரண்டு முறை தமிழரசுக் கட்சியுடன் இது தொடர்பில் பேசியுள்ளாேம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடனும் பேசியுள்ளாேம். அந்த அடிப்படையை வைத்து தான் பேசினாேம். தமிழ் கட்சிகளுடன் தான் நாம் பேசியுள்ளாேம்.
ஏனைய தேசிய கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது என தீர்மானம் இல்லை. ஆனால் ஆட்சி அமைக்கும் கட்சிகளுக்கு அவர்கள் ஆதரவு வழங்கினால் அது அந்த கட்சியின் நிலைப்பாடே எனத் தெரிவித்தார்.