11 20
அரசியல்இலங்கை

ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர் ஜெயசூர்யா

Share

ஓய்வு பெறுகிறார் பிரதம நீதியரசர் ஜெயசூர்யா

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய (Jayantha Jayasuriya) சட்டத்துறையில் 41 வருட சேவையை நிறைவு செய்து இம்மாதம் 30ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.

ஜயந்த ஜயசூரிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில், அவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது நாட்டின் சட்டமா அதிபராக பணியாற்றினார். ஜயந்த ஜயசூரிய 1983 ஆம் ஆண்டு அரசாங்க சட்டத்தரணியாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்துகொண்டார்.

ஓய்வுபெறவுள்ள பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை கௌரவிக்கும் சம்பிரதாய ரீதியிலான விசேட உச்ச நீதிமன்ற அமர்வு எதிர்வரும் 30ஆம் திகதி உச்ச நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

அவர் ஓய்வு பெற்ற பின்னர், பதில் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ(Murdu Fernando) புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...