24 66601171225ec
இலங்கைசெய்திகள்

மின்சார கட்டண சீரமைப்பு : உச்சநீதிமன்றத்தின் திருத்தங்களை ஏற்ற அரசு

Share

மின்சார கட்டண சீரமைப்பு : உச்சநீதிமன்றத்தின் திருத்தங்களை ஏற்ற அரசு

மின்சார கட்டணம் தொடர்பில் உச்சநீதிமன்றம் சமர்ப்பித்த அனைத்து திருத்தங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.

நேற்று (04) அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதன்படி, மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை அல்ல என்றும், அந்த சரத்துக்கள் நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு சரத்தும் பொது வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கருத்தை முன்வைத்த சபாநாயகர், உரிய சரத்துக்களை திருத்தினால் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...