tamilni 165 scaled
இலங்கைசெய்திகள்

நாடு முழுவதும் மூடப்படும் பல்பொருள் அங்காடிகள்

Share

நாடு முழுவதும் ஐந்நூறு பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக வர்த்தக சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுடன் தங்களது செயற்பாடுகளைத் தக்கவைக்க முடியாததே இதற்கான காரணம் என்றும், மூடப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான கடைகள் மேல் மாகாணத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 75% குறைந்துள்ளதாகவும் வர்த்தக சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பல பல்பொருள் அங்காடிகளில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் இருப்பதால், தற்போதைய வருமானத்தின் அடிப்படையில் பணியாளர்களை பராமரிப்பது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில வர்த்தகர்கள், பொருட்களை விற்கும் முகவர்களுக்கு தினசரி கொடுப்பனவைக் கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், சில வர்த்தகர்கள் கொடுக்கும் காசோலைகளில் பணம் இருப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....