பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சுப்பர்மடத்தில் கோஷ்டி மோதல்! – ஐவர் வைத்தியசாலையில்

Share

பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த 5 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடற்றொழிலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டது எனவும், இதில் வாள், கொட்டன்கள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த கொட்டடியைச் சேர்ந்த சிறிமுருகன் சிறிகஜன் (வயது – 23), வியாபாரிமூலையைச் சேர்ந்த தேவநாயகம் பிரேம்ராஜ் (வயது – 30), சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜீவநாயகம் ராஜீவன் (வயது – 26), பொன்னம்பலம் ரகுநாதன் (வயது- 39), தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது – 41) ஆகியோர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

bts pictures 0ynzwrpbewd63qlf
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...