24 664945da3e672
இலங்கைசெய்திகள்

சொகுசு வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி: அரசாங்கத்திற்கு அதிக இழப்பு

Share

சொகுசு வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி: அரசாங்கத்திற்கு அதிக இழப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 15 வருடங்களில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு 10,000க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், இந்த மோசடி தொடர்பான விசாரணைக்கு தரவு அமைப்பின் நகலை பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணைகளின் பின்னர், மோசடியில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு விசாரணை அதிகாரிகளுக்கு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியினால் ஏற்பட்ட நட்டத்தை விட இந்த மோசடி மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு மிக அதிகம் எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...