ஆட்சியைப் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும்!
இலங்கைசெய்திகள்

ஆட்சியைப் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும்!

Share

ஆட்சியைப் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும்!

ஆட்சியை நாம் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் பொருளாதாரப் பிரச்சினை தீரவில்லை. அதிகாரம் உள்ள வர்க்கம் அதிகாரம் அற்ற வர்க்கத்தை நிர்வகித்துக் கொண்டு செல்கின்றது. அவர்களைக் கஷ்டத்தில் தள்ளியுள்ளது.

அந்த மக்கள் வாழ்வதற்காகப் போராடுகின்றார்கள். அவர்களை நாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். அந்த மக்களின் பிரச்சினை தீர வேண்டுமென்றால் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்.

அந்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பல வழிகளில் நாம் போராடுகின்றோம். ஆட்சியைப் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும்.

மின் வெட்டு இல்லாததால், எரிபொருளுக்கான வரிசை இல்லாததால் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டது என்று சிலர் நினைக்கின்றார்கள்.

ஆனால், உண்மையில் பிரச்சினை தீரவில்லை. பிரச்சினை தீர்ந்தால் மக்கள் மூன்று வேளையும் சாப்பிட்டு நிம்மதியாக இருக்க வேண்டுமே என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...