இலங்கைசெய்திகள்

இதனை செய்தால் மட்டுமே ஆதரவு…அநுர அரசுக்கு சுமந்திரன் விதிக்கும் நிபந்தனை

Share

இதனை செய்தால் மட்டுமே ஆதரவு…அநுர அரசுக்கு சுமந்திரன் விதிக்கும் நிபந்தனை

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றினால் மாத்திரமே அரசாங்கத்தின் அரசியலமைப்பு தயாரிப்பிற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கை தமிழரசு கட்சி கட்சியின் ஊடகப் பேச்சாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பில் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் என்பன உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், புதிய அரசியலமைப்பு தொடர்பான தனது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அதற்கான பணிகளை ஆரம்பித்ததன் பின்னரே அறிவிக்க முடியும் என்றும் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாக உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அரசாங்கம் புதிய அரசியலமைப்பு தயாரிப்பை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜே.வி.பி.யின் உறுப்பினர்களும் புதிய அரசியலமைப்பு வரைவை தயாரிப்பதற்கான கூட்டங்களில் கலந்துகொண்டதாகவும், பொதுத் தேர்தலின் பின்னர் மூன்று தடவைகள் தான் ஜனாதிபதியை சந்தித்து புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...