rtjy 82 scaled
இலங்கைசெய்திகள்

சுமந்திரனை பாதுகாத்த பயங்கரவாத தடைச் சட்டம்

Share

சுமந்திரனை பாதுகாத்த பயங்கரவாத தடைச் சட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை வேவு பார்த்ததாகவும் அவருக்கெதிரான சதித்திட்டங்களை வகுத்ததாகவும் தெரிவித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (06.120.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பயங்கரவாத தடைச் சட்டத்தை சில தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கு வேண்டிய நேரத்தில் சாதகமாக பயன்படுத்துவதுடன் தமக்கு சாதகமற்ற காலங்களில் அதற்கு எதிராக பொது வெளியில் கூச்சலிடுவதும் ஏன் என்று புரியவில்லை.

நல்லாட்சி அரசின் காலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு வழிவகை செய்து கொடுத்தவர்களும் அதில் பங்கெடுத்தவர்களும் தற்போது மௌனமாகவே காணப்படுகின்றனர்.

ஆகவே காலத்துக்கு காலம் ஏதோ ஒரு பிரச்சினை உருவாகத்தான் போகின்றது என்பதே யதார்த்தமாகும்.

அதேபோல சமூகவலைத் தளங்களை கட்டுப்படுத்தல், இனவாதக் கருத்துக்களை பரவவிட்டு இன முறுகல் நிலைகளை உருவாக்கி நாட்டில் ஏற்பட்டுவரும் இன நல்லிணக்கத்தையும் பொருளாதார இடரிலிருந்து நாடு மீள்வதையும் சீரழிப்பதற்கு வழிவகை செய்வதாகவே அமைகின்றது.

ஆவே பெருந்தேசியவாதமும், குறுந்தேசியவாதமும் இவற்றை ஊதிப் பெரிதாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமது அரசியல் நகர்வுகளை செய்தகொண்டுதான் இருப்பார்கள்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் தமிழ் தரப்பினருக்கிடையே இருக்கின்ற ஒன்றுமையீனத்தை கழைத்து அனைத்த தரப்பினரும் ஒரு நிலைப்பாட்டுடன் அரசியல் தீர்வுக்கான வழியை தேடுவதே சிறந்தது என்பது எமது கட்சியின் நிலைப்பாடாக இருக்கின்றது.

இதை இந்தியாவும் எதிர்பார்க்கின்றது. அதேபோல மேற்குலகமும் இதையே தமிழ் தரப்பினருக்கு வலியுறுத்தியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 1 8
செய்திகள்இலங்கை

வவுனியாவில் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணை ஆரம்பம்: வட்டி, போதைப்பொருள் விற்பனை மூலம் அபகரித்த சொத்துக்கள் இலக்கு!

சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்த நபர்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து தற்போது வவுனியாவிலும் காவல்துறையினரால் விசாரணைகள்...

image 37812857b2
இலங்கைசெய்திகள்

வாகன விலைகள் ராக்கெட் வேகத்தில் உயரும்: 15% வரி தள்ளுபடி நீக்கப்படலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் வாகன இறக்குமதி விலைகள் வரம்புகளைத் தாண்டி அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்...

images 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு: நவம்பர் 17 அன்று அனைத்துத் தரப்பினரும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, நேற்று (ஒக்டோபர் 27)...

19sex 17509
செய்திகள்இலங்கை

சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு: 9 மாதங்களில் 7,677 முறைப்பாடுகள் – பாலியல் அத்துமீறல்கள் 414 ஆக பதிவு

2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக 414...