tamilni 75 scaled
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் சுமந்திரன் யாழ்.செல்ல முடியுமா!

Share

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் சுமந்திரன் யாழ்.செல்ல முடியுமா!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்காக வெட்கப்பட வேண்டுமென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய போது நீதியமைச்சர் வெட்கப்பட வேண்டுமென சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை சிறப்புரிமையை பயன்படுத்தி நாடாளுமன்றில் பிழையான தகவல்கள் வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருந்தால் சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களினால் இன்று யாழ்ப்பாணம் சென்றிருக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதி அமைச்சராக தாம் பதவி வகிப்பதற்கு வெட்கப்பட வேண்டும் என தம்மை சுமந்திரன் விமர்சித்துள்ளார்.

இதற்காக மூன்று காரணிகளை சுமந்திரன் முன் வைத்தார் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மட்டக்களப்பில் சுமன தேரர் தமிழர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதாகவும், மாவீரர் தின நிகழ்வுகளை தடுக்க நீதிபதிகள் தடை உத்தரவை விதிப்பதாகவும் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும் சுமந்திரன் குற்றம் சுமத்தி இருந்தார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிக்கின்றேன்.

நீதி அமைச்சர் என்ற வகையில் என்னால் கைது செய்ய முடியாது. அது பொலிஸாரின் கடமையாகும். மாவீரர் தின நிகழ்வுகளில் நடத்த வேண்டாம் என நீதிபதிகளிலேயே யாரும் கூறவில்லை. அவர்கள் எடுக்கும் சுயாதீனமான தீர்மானமே அது மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கூறுகின்றார்.

சுமந்திரனை புலம்பெயர் தரப்பு ஒன்று படுகொலை செய்வதற்கு முயற்சித்தது. 20 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

சுமந்திரன் பெறுமதி 20 லட்சம் தானா என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புலனாய்வு பிரிவினரும் இராணுவத்தினரும் சிறந்த முறையில் செயற்பட்டு இந்த சூழ்ச்சியின் பின்னணியில் இருந்த ஐந்து தமிழ் இளைஞர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சுமந்திரனுக்கு கொலை மிரட்டல் வரும்போது பயங்கரவாத சட்டம் சரியானது என்றும் ஏனைய கொலையாளிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தும் போது அது பிழையானது எனவும் இவ்வாறு கூற முடியும் என விஜயதாச ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நாடாளுமன்றில் இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்க வேண்டாம் என கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...