சீனி நெருக்கடிக்கு தீர்வாக கரும்பு உற்பத்தி!!

inner211579770162 1

சீனி நெருக்கடிக்கு தீர்வாக கரும்பு உற்பத்தி!!

சீனி நெருக்கடிக்கு தீர்வாக இவ்வாண்டு கரும்பு உற்பத்திக் கிராமங்கள் பல அமைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

மேலும், கரும்பு உற்பத்தி செய்யும் கிராமங்களை அமைக்கவும் கரும்புப் பானி உற்பத்திக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் கரும்பு பயிரிடக்கூடிய பகுதிகளை ஆராயுமாறு கரும்பு ஆராய்ச்சி நிறுவனத் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, புத்தளம், கிளிநொச்சி மற்றும் பதுளை மாவட்டங்களில் கரும்பு உற்பத்தி விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version