16 26
இலங்கைசெய்திகள்

24 மணித்தியாலத்திற்குள் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் உயர்வு

Share

24 மணித்தியாலத்திற்குள் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் உயர்வு

இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று (24) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது.

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் இந்த சடுதியான உயர்வு பதிவாகியுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியாக 292.25 ரூபாவாகவும், விற்பனை பெறுமதியாக 300.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 289.73 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.52 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

மேலும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302.03 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 314.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.78 ரூபாவாகவும் , விற்பனை பெறுமதி 210.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180.14 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 189.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...