rtjy 78 scaled
இலங்கைசெய்திகள்

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடை! வெளியான காரணம்

Share

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடை! வெளியான காரணம்

நாடு முழுவதும் நேற்று மாலை திடீரென மின் துண்டிக்கப்பட்டதற்கு, கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்புக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில், இலங்கை மின்சார சபையும், மின்சார அமைச்சும் இணைந்து இருவேறு விசாரணைகைள நடத்தவுள்ளன.

இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்றைய(10) நாடாளுமன்ற விவாதத்தின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்றைய திடீர் மின் தடை குறித்து இன்று பிற்பகல் விளக்கமளிக்கவுள்ளார்.

நாடளாவிய ரீதியில் நேற்று மாலை ஏற்பட்ட மின் தடை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று மாலை 05.10 மணியளவில் நாடு முழுவதும் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.

இலங்கை மின்சார சபை ஏற்பட்ட சிக்கல்களை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டதுடன், நேற்று இரவு 11 மணியளவில் நாடு முழுவதும் மீண்டும் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாட்டைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் துல்லியமாக வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...