download 8 1 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீதியை கடக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..!

Share

வீதியை கடக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..!

பாடசாலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்டபோது பின்னால் வந்த சிறிய ரக லொறி ஒன்று மோதியதில் பதினொரு வயது மாணவன் உயிரிழந்துள்ளதாக ஹெட்டிபொல காவல்துறையினர் தெரிவித்தனர்.

கட்டுபொத – மூனமல்தெனிய பிரதான வீதியில் அங்கமுவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

பேருந்து நிறுத்தப்பட்டதும், பல மாணவர்கள் பேருந்தின் முன் வாசல் வழியாக இறங்கினர், ஆனால் இந்த மாணவர் பேருந்தின் பின் வாசல் வழியாக இறங்கியுள்ளார்.

பேருந்து கட்டுபொதவில் இருந்து மூனமல்தெனிய நோக்கியும், சிறிய லொறி மூனமல்தெனியவிலிருந்து கட்டுபொத்த நோக்கியும் சென்று கொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பேருந்தில் இருந்து இறங்கிய மாணவன் சாலையை கடக்க முன்னோக்கி சென்றபோது, ​​குறித்த சிறிய லொறி சிறுவனை மோதி தள்ளியுள்ளது. விபத்து இடம்பெற்று சிறிது நேரத்தில் தராவா குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் மாணவன் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும்,மாணவன் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை தெரியவந்தது.

குளியாபிட்டிய கல்வி வலயத்திற்குட்பட்ட மொரகனே மகா வித்தியாலயத்தில் ஆறாம் (6) தரத்தில் கல்வி கற்கும் அனுக்கன்ஹேன மகுலகமவைச் சேர்ந்த ஐ.எச்.ஹிமாஷா இடுனில் என்ற பதினொரு வயது மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற லொறியின் சாரதி தமுனுவ, மொரகனே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சாரதியும் வாகனமும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...