இலங்கையில் நாளை பிற்பகல் வரை வீசும் கடும் காற்று

25 6848bdcd24bc4

இலங்கையில் இன்று(11.06.2025) பிற்பகல் 02.30 மணி வரை பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகங்கள் மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version