9
இலங்கைசெய்திகள்

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழர்கள்! பொன்சேகா – சவேந்திரசில்வா தொடர்பில் வலுத்த கோரிக்கை

Share

இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் சவேந்திர சில்வா போன்றோரை கைது செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தம்பிராசா கூறியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்

“இலங்கை பொலிஸாருடன் பேசத்தெரியத அர்ச்சுனா எம்பி தனது தவறுகளை உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் தமிழ் மக்களின் உறவுகளான மலையக தமிழரை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளையும் அர்ச்சுனா எம்.பி நிறுத்த வேண்டும்.

நீதி கேட்டு போராடும் தமிழினம் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கைக்கு கொண்டாட்டமாகவே இருக்கும் என்பதையும் அர்ச்சுனா விளங்கிக் கொள்ளவேண்டும்.

அந்தவகையில் முட்டாள் தனமாக அமைச்சர் சந்திரசேகரனை தாக்குவதை அர்ச்சுனா எம்.பி கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

அத்துடன் கடந்தகால விடயங்களை கூறி அர்ச்சுனா எம்பி மன்னார் விடையத்தில் சாக்குப் போக்கு காட்டி தப்பித்துக் கொள்ள முடியாது. இது எமது மக்களின் இருப்புக்கான போராட்டம்.

இதை முன்னெடுக்கும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மன்னார் சென்று போராடத்தை வலுப்படுத்த வேண்டும். மேலும் இறுதி யுத்த காலப் பகுதியில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த போராளிகள் மக்கள் தொடர்பிலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசு வெளிக்கொணர வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
09 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எதிர்காலத்தில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி எச்சரிக்கை

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், தற்போது மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், வரும் காலங்களில்...

08 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் எரிபொருள் கையிருப்பு விபரம்: வலுசக்தி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரை!

சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர்...

07 16
செய்திகள்இந்தியா

ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்: “ரஜினிகாந்த் யாராலும் எட்ட முடியாத உயரத்தில் இருப்பவர்”

நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்குப் பயந்துதான் அரசியலுக்கு வரவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)...

06 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளுக்குப் புதிய வழிகாட்டுதல்கள்: புதன்கிழமை விடுமுறை மற்றும் கல்விச் சுற்றுலாக்களுக்குத் தடை!

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் கல்விச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் கல்வி,...