11 7
இலங்கைசெய்திகள்

விஜேராம இல்லத்தில் திருட்டுப்பொருட்கள்! உண்மைகளை மூடி மறைக்க மகிந்த வகுத்த திட்டம்

Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து பல மதிப்புமிக்க பொருட்களை திருடி விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விஜேராம மாவத்தையில் உள்ள அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தில் மகிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான எந்தவொரு தனிப்பட்ட உடைமைகளும் இல்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக மகிந்த ராஜபக்ச வசித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள அரசாங்கப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றில் உள்ள திருட்டுப்பெருட்களை அப்பறப்படுத்துவதே அவற்றின் பின்னால் உள்ள நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

இவை மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட நோக்கத்துடன் செய்யப்பட்டது என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து தொடர்புடைய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபகசவும் அந்த வீடுகளில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...