இலங்கைசெய்திகள்

விசாரணைகளை ஆரம்பிக்குக! – மொட்டு எம்பிக்கள் கோரிக்கை

Share

பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு எதிராக முறையான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுக்குமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கடந்த வாரம் மூன்றாவது முறையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மே 9ஆம் திகதியன்று எம்.பிக்களின் வீடுகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க சொத்துக்களை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தில் எம்.பிக்கள் குழுவொன்று இது தொடர்பில் வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ்மா அதிபர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மொட்டு எம்.பிக்கள் சிலர் அரசாங்க தலைவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

 

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...