tamilni 34 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் உள்நுழைய தயாராகும் இந்திய நிறுவனம்

Share

இலங்கைக்குள் உள்நுழைய தயாராகும் இந்திய நிறுவனம்

இந்தியாவின் தமிழக எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கைக்கு சிமெந்து ஏற்றுமதி செய்யும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த ஏற்றுமதி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்வி, மருத்துவம், ஹோட்டல் என்று பல்வேறு தொழில் துறைகளில் முன்னணியில் திகழும், தமிழக எஸ்.ஆர்.எம். குழுமம் தனது வர்த்தகத்தை மேலும் பல துறைகளில் விரிவுப்படுத்த தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தற்போது சிமெந்து உற்பத்தி துறையில் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்காக, 225 கோடி முதலீட்டில் எஸ்.ஆர்.எம்.பி. சிமெண்ட்ஸ் நிறுவனம் என்ற புதிய நிறுவனத்தை எஸ்.ஆர்.எம். குழுமம் ஆரம்பித்துள்ளது.
இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்தநிலையில் நவம்பர் 15 முதல் இலங்கை, மாலைத்தீவு, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு எஸ்ஆர்எம் நிறுவனம், தமது சீமெந்து ஏற்றுமதியை ஆரம்பிக்கவுள்ளது.

இந்தநிலையில் நிறுவனம் தமிழ்நாட்டில் 3 ஆலைகளையும், ஆந்திராவில் ஒரு ஆலையையும் கொண்டுள்ளது.

இந்த ஆலைகளின் ஆண்டு உற்பத்தி திறன் 4.20 இலட்சம் டன்னாகும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இதனை 1 கோடி டன்னாக அதிகரிக்க, நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...