tamilni 34 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் உள்நுழைய தயாராகும் இந்திய நிறுவனம்

Share

இலங்கைக்குள் உள்நுழைய தயாராகும் இந்திய நிறுவனம்

இந்தியாவின் தமிழக எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கைக்கு சிமெந்து ஏற்றுமதி செய்யும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த ஏற்றுமதி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்வி, மருத்துவம், ஹோட்டல் என்று பல்வேறு தொழில் துறைகளில் முன்னணியில் திகழும், தமிழக எஸ்.ஆர்.எம். குழுமம் தனது வர்த்தகத்தை மேலும் பல துறைகளில் விரிவுப்படுத்த தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தற்போது சிமெந்து உற்பத்தி துறையில் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்காக, 225 கோடி முதலீட்டில் எஸ்.ஆர்.எம்.பி. சிமெண்ட்ஸ் நிறுவனம் என்ற புதிய நிறுவனத்தை எஸ்.ஆர்.எம். குழுமம் ஆரம்பித்துள்ளது.
இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்தநிலையில் நவம்பர் 15 முதல் இலங்கை, மாலைத்தீவு, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு எஸ்ஆர்எம் நிறுவனம், தமது சீமெந்து ஏற்றுமதியை ஆரம்பிக்கவுள்ளது.

இந்தநிலையில் நிறுவனம் தமிழ்நாட்டில் 3 ஆலைகளையும், ஆந்திராவில் ஒரு ஆலையையும் கொண்டுள்ளது.

இந்த ஆலைகளின் ஆண்டு உற்பத்தி திறன் 4.20 இலட்சம் டன்னாகும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இதனை 1 கோடி டன்னாக அதிகரிக்க, நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...