Untitled 1 38 scaled
இலங்கைசெய்திகள்

பச்சைக் கொடி காட்டிய சீனா : அலி சப்ரி

Share

இலங்கைக்கான முக்கிய கடன் வழங்குநரான சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியுடன் கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு இலங்கையின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உறுதியளித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ள அமைச்சர் சப்ரி, சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் வு பலினுடன் பேச்சு நடத்தினார்.

இதன்போது இலங்கையின் பேச்சுவார்த்தையாளர்களுடன் ஆக்கப்பூர்வமாக செயற்படுவதாகவும், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு பங்களிப்பதாகவும் சீன வங்கி உறுதியளித்ததாக சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிநாட்டுக் கடனை செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியது.

இதனையடுத்து தற்போது, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க அரசாங்கம் தனது கடன்களை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதற்கிடையில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் 7.1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பதற்கு இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை உருவாக்கியுள்ளன.

இந்தநிலையில் இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டுக் கடன்களில் 10 சதவீதம் சீனாவில் இருந்து பெறப்பட்ட கடன்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...

Woman Harassment
உலகம்செய்திகள்

சக பெண் விமானி மீது பாலியல் பலாத்கார முயற்சி: பெங்களூருவில் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது விமானி ஒருவர், தான் வேலை செய்யும் விமான...