6
இலங்கைசெய்திகள்

சஜித்தை கடைகளுக்கு செல்லுமாறு அமைச்சர் கிண்டல்!!

Share

சஜித்தை கடைகளுக்கு செல்லுமாறு அமைச்சர் கிண்டல்!!

அரிசியின் விலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள கடைக்குப் போய் வருமாறு சஜித்துக்கு அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். அரிசியின் விலை குறித்த தகவல்கள் தெரியாததால், எதிர்க்கட்சித் தலைவரிடம் கடைக்குச் சென்று அரிசியின் சரியான விலையைக் கண்டறியுமாறு கேட்டுக்கொள்வதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாசுமதி, கீரி சம்பாவை பற்றி யோசித்து விட்டு மற்ற அரிசி பற்றி பேச வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவரிடம் அமரவீர தொடர்ந்தும் கேட்டுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மகிந்த அமரவீர மேலும் தெரிவித்ததாவது, நீங்கள் ஹம்பாந்தோட்டையில் நீண்ட காலம் இருந்தீர்கள். அரிசி 220க்கு விற்கப்படுகிறது என்று சொன்னீர்கள். நீங்கள் சமீபத்தில் கடைக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். லுனுகம்வெஹர பிரதேசத்தில் அரிசியின் விலை 125 ரூபாவாக பதிவாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் பணியாற்றிய அனைவரும் சந்தைக்குச் சென்றனர். சென்று விலைகளைக் கண்டறிந்தார்கள்.

நீங்களும் அவ்வாறு போய் வாருங்கள். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு நீங்கள் கருத்துச் சொல்லாதீர்கள். பாசுமதி, கிரி சம்பாவை பற்றி யோசித்து பேசாதீர்கள். இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் நாடு மற்றும் பச்சை அரிசியை உண்கின்றனர். அவற்றின் விலை 200 ரூபாவுக்கு மேல் இல்லை.

எம்ஓபி உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. யாராவது கொடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன். பொலன்னறுவையில் யூரியாவில் சிறிய பிரச்சினை ஏற்பட்டது. நாடு முழுவதும் யூரியா போகிறது.

மண் உரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாக எம்ஓபி உரம் உள்ளது. சில அதிகாரிகள் அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக உரத்தட்டுப்பாடுகளை உருவாக்குகின்றனர். அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...