24 6657d4809cfa1
இலங்கைசெய்திகள்

இலங்கை குடியுரிமை தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல்

Share

இலங்கை குடியுரிமை தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல்

இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை குடியுரிமையை கைவிட்டவர்கள் உள்ளிட்ட இலங்கையை பூர்வீகமாகக்கொண்டவர்கள் மற்றும் இலங்கையர்களின் வெளிநாட்டு வாழ்க்கை துணையாளர்கள் ஆகியோர் நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்வதற்கான புதிய விதிமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு நிரந்தர வதிவிட வீசா உத்தரவு என இந்த வர்த்தமானி அறிவித்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள், குடியுரிமை சட்டத்தின் 19, 20 அல்லது 21ம் சரத்தின் பிரகாரம் குடியுரிமை ரத்து செய்யப்பட்டவர்கள் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்ய முடியும்.

மேலும் இலங்கையர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணையாளர்கள் திருமணம் செய்து கொண்டு ஆறு மாதங்களில் விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்குள் திருமணம் ரத்தானால் குடியுரிமையும் ரத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் அல்லது தாத்தா,பாட்டி இலங்கையில் பிறந்து இலங்கை குடியுரிமை கொண்டவர்களாயின் அவ்வாறானவர்கள் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என அடையாளப்படுத்தப்படுவர்.

அடிப்படை விண்ணப்பதாரிகளிடம் ஆயிரம் டொலர்கள் அறவீடு செய்யப்படும் அதேவேளை, வெளிநாட்டு வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளிடம் தலா 400 டொலர்கள் அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு மே மாதம் 7ம் திகதி 2383/17ம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
1760325390 G3C9lufWoAA88wr 1
உலகம்செய்திகள்

ஜஸ்டின் ட்ரூடோ – கேட்டி பெர்ரி காதல் வதந்தி மீண்டும் தீவிரம்: ஜப்பானியப் பிரதமரின் ‘பங்காளர்’ எனக் குறிப்பிட்ட பதிவு!

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்கப் பாடகி கேட்டி பெர்ரி இடையேயான காதல்...

images 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வழுக்கையாற்றுப் பாதுகாப்பு: WASPAR ஆய்வு முடிவுகளை நடைமுறைப்படுத்த வடக்கு ஆளுநர் உறுதி!

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம் என வலியுறுத்திய வடக்கு...

1500x900 44535787 chennai 07
உலகம்செய்திகள்

ஐரோப்பிய விதிகளை மீறிய எலான் மஸ்கின் எக்ஸ் தளத்திற்கு ரூ. 4,140 கோடி அபராதம்!

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் (X) வலைத்தளம், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய...

tamilnadu 4
இந்தியாஇலங்கைசெய்திகள்

டித்வா புயல் நிவாரணம்: தமிழக அரசு சார்பில் 950 தொன் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு!

‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக...