image 1
இலங்கைசெய்திகள்

விமானிகள் பற்றாக்குறை: சிக்கலில் விமானசேவை

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பாரியளவிலான விமானிகளுக்கான வெற்றிடங்கள் இருப்பதன் காரணமாக சர்வதேச நியமங்களை மீறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் சுமார் 80 விமானிகளுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக நேற்றைய தினம் (23.06.2023) குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறான விமானிகள் பற்றாக்குறை காரணமாக கடந்த ஜூன் 18 முதல் 22 வரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 13 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானிகளுக்கான பற்றாக்குறை மற்றும் விமானப் பயணிகளுக்கான வசதிக் குறைவுகள் என்று ஶ்ரீலங்கன் விமானசேவையை வேறு தரப்புக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் படிப்படியாக முன்னெடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அதனையடுத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அதனை ஆமோதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...