14 9
இலங்கைசெய்திகள்

தெற்காசியாவில் முதன்முறையாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு கிடைத்த அங்கீகாரம்

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சரக்குப் பிரிவான ஸ்ரீலங்கன் கார்கோ, லித்தியம் மற்றும் சோடியம் அயன் பேட்டரிகளை கொண்டு செல்வதற்கு சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்திடமிருந்து ஒப்புதல் பெற்ற தெற்காசியாவின் முதல் விமான நிறுவனமாக மாறியுள்ளது.

இந்த அனுமதியைப் பெறுவதற்காக, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தால் கடுமையான மதிப்பீடு மற்றும் தணிக்கை செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஸ்ரீலங்கன் கார்கோவிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த மின்கலங்களின் பயன்பாடு தற்போது உலகளவில் வேகமாக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த அங்கீகாரத்தை பெறுவது இலங்கையின் அறிவியல் மற்றும் வணிகத் துறைகளில் ஒரு பெரிய சாதனையாக மாறியுள்ளது.

ஸ்ரீலங்கன் கார்கோ வாரத்திற்கு உலகம் முழுவதும் 21 நாடுகளில் 30 நகரங்களுக்கு நேரடியாக சேவையை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...