6 14 scaled
இலங்கைசெய்திகள்

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

Share

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

கடனில் உள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமான சேவை நிறுவனத்திற்கு பொருத்தமான முதலீட்டாளர்கள் இன்னும் வரவில்லை எனதகவல்கள் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வர்த்தக காரணங்களுக்காக சிறிலங்கன் ஏர்லைன்ஸின் மதிப்பீட்டை திரும்பப் பெறத் தெரிவு செய்துள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) அறிவித்துள்ளது.

எனவே இனி தேசிய விமான நிறுவனத்திற்கு மதிப்பீடுகள் அல்லது பகுப்பாய்வுக்களை வழங்கப் போவதில்லை என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி சிறிலங்கன் ஏர்லைன்ஸின் 7 சதவீத பாதுகாப்பற்ற பத்திரங்களுக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளித்த 175 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீதான மதிப்பீட்டையும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் திரும்பப் பெற்றுள்ளது.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பத்திரங்களின் அசல் மற்றும் வட்டியை 25 ஜூன் 2024 இல் செலுத்தவில்லை, அத்துடன் தற்போது 30 நாள் சலுகைக் காலத்திற்குள் உள்ளது.

சிறிலங்கன் விமான சேவையில், உலகளாவிய ஆர்வம் குறைவாக இருந்ததால், அரசாங்கம் விமானத்தை நிறுவனத்தை முழுமையாக விற்பனை திட்டத்துக்கு பதிலாக, அதனை மறுசீரமைக்க முயற்சிக்கிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...