5 20 scaled
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த மற்றும் மைத்திரி தொடர்பில் வெளியான தகவல்

Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த மற்றும் மைத்திரி தொடர்பில் வெளியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதியின் சிறப்பு சலுகையின் கீழ் பொது நிதியை பயன்படுத்தியமை தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) 2005 மற்றும் 2015 க்கு இடையில் ஜனாதிபதியின் சிறப்புச் சலுகையின் கீழ் விமானப்படை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி 978 தடவைகள் விமானம் ஊடாக பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் 557 தடவைகள் விமானம் ஊடாக பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இந்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் சிறப்புரிமையின் கீழ் உள் விமானங்கள் மூலம் மொத்தம் 131,277.17 கிலோமீட்டர் தூரத்தை பயணித்துள்ளார்.

ஒப்பீட்டளவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது பதவிக்காலத்தில் விமானப்படை ஹெலிகாப்டர்களை அதிகளவில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் ஹெலிகாப்டர் பயணத்திற்கு பொது நிதியை பயன்படுத்தியதற்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...