image 1
இலங்கைசெய்திகள்

விமானிகள் பற்றாக்குறை: சிக்கலில் விமானசேவை

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பாரியளவிலான விமானிகளுக்கான வெற்றிடங்கள் இருப்பதன் காரணமாக சர்வதேச நியமங்களை மீறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் சுமார் 80 விமானிகளுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக நேற்றைய தினம் (23.06.2023) குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறான விமானிகள் பற்றாக்குறை காரணமாக கடந்த ஜூன் 18 முதல் 22 வரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 13 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானிகளுக்கான பற்றாக்குறை மற்றும் விமானப் பயணிகளுக்கான வசதிக் குறைவுகள் என்று ஶ்ரீலங்கன் விமானசேவையை வேறு தரப்புக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் படிப்படியாக முன்னெடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அதனையடுத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அதனை ஆமோதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...