tamilni 335 scaled
இலங்கைசெய்திகள்

மீண்டும் சூறாவளி ஏற்படும் அபாயம்: எச்சரிக்கை

Share

மீண்டும் சூறாவளி ஏற்படும் அபாயம்: எச்சரிக்கை

அடுத்த வாரம் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக 24 ஆம், 25ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு சூறாவளி Mauritius தீவு மற்றும் அதனை அண்டிய சில தீவுகளை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பொங்கல் தினத்தன்று Belal என்னும் சூறாவளி Mauritius தீவுகளை தாக்கியிருந்த நிலையில் மீண்டும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் சீரான காலநிலையே தொடரும் என இலங்கை வளிமண்டவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மட்டக்களப்பு, பொத்துவில், திருகோணமலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் மழைக்கான சாத்திய கூறுகள் குறைவாக உள்ளதாகவும் முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...