tamilni 497 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபயவை விரட்டியடித்த சதியின் பின்னணியில் பசில்

Share

நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு பசில் ராஜபக்சவினால் கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார் என தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது திலித் ஜயவீர இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு பசில் ராஜபக்சவினால் கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார். இந்த சதியின் பின்னணியில் பசில் ராஜபக்சவே செயற்பட்டார்.

பசில் ராஜபக்சவின் ஆதிக்கம் காரணமாக கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் பயணம் நிறைவுக்கு வந்தது.இதன் விளைவாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார்.

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து மீள தேசியவாதம் அத்தியாவசியமானது எனவும்,கோட்டாபய ராஜபக்ச தேசியவாதம் என்றால் என்ன என்பதை ஓரளவு அறிந்தவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பின்னணியில், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்சவின் கருத்துக்களுக்கமையவே கோட்டாபய ராஜபக்ச செயல்பட்டதாக திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

மேலும், பசில் ராஜபக்சவின் ஆட்சிக் கவிழ்ப்பினால் ஏமாற்றமடைந்த மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் குழு அனுர திஸாநாயக்க தலைமையிலான குழுவில் இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...