24 660f5137758cd
இலங்கைசெய்திகள்

இரண்டு வருடங்களில் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி

Share

இரண்டு வருடங்களில் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி

இலங்கையின் பொருளாதாரம் நன்றாக இருப்பதாக கூறப்பட்டாலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான பணம் இல்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை பொறுத்தமட்டில் இலங்கை இன்னமும் திருப்திகரமான நிலையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,புத்தாண்டு காலம் நெருங்கினாலும் வழக்கம் போல் புத்தாண்டை கொண்டாட பணம் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்டதாக அதிகாரிகள் கூறும் சூழலில் கூட ஏன் மக்களிடம் பணம் இல்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கையில் வறுமை நிலை தொடர்ச்சியாக 4 வருடங்களாக அதிகரித்துள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் 25 வீதம் இலங்கையர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள் என்றும் உலக வங்கி அண்மையில் தெரிவித்தது.

இவ்வாறான சூழலில், 2026 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வறுமை விகிதம் 22 வீதத்தை விட அதிகமாக இருக்கும் எனவும் உலக வங்கி கணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...