24 660f5137758cd
இலங்கைசெய்திகள்

இரண்டு வருடங்களில் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி

Share

இரண்டு வருடங்களில் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி

இலங்கையின் பொருளாதாரம் நன்றாக இருப்பதாக கூறப்பட்டாலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான பணம் இல்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை பொறுத்தமட்டில் இலங்கை இன்னமும் திருப்திகரமான நிலையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,புத்தாண்டு காலம் நெருங்கினாலும் வழக்கம் போல் புத்தாண்டை கொண்டாட பணம் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்டதாக அதிகாரிகள் கூறும் சூழலில் கூட ஏன் மக்களிடம் பணம் இல்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கையில் வறுமை நிலை தொடர்ச்சியாக 4 வருடங்களாக அதிகரித்துள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் 25 வீதம் இலங்கையர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள் என்றும் உலக வங்கி அண்மையில் தெரிவித்தது.

இவ்வாறான சூழலில், 2026 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வறுமை விகிதம் 22 வீதத்தை விட அதிகமாக இருக்கும் எனவும் உலக வங்கி கணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
04 19
செய்திகள்இலங்கைஉலகம்

கியூபாவில் மின்சாரத் தடை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு: குடிநீரின்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்!

கியூபாவில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை...

03 20
இலங்கைஅரசியல்

பழைய ஏகபோகங்களை நீக்கிப் புதிய மாஃபியாக்களை உருவாக்கக் கூடாது: மனோ கணேசன் எச்சரிக்கை!

எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து கொள்வனவுகளில் நிலவும் ஏகபோகக் கூட்டணிகளை (Monopolies) முறியடிப்பதாக ஜனாதிபதி அநுர...

02 19
செய்திகள்உலகம்

யுத்த நிறுத்தத்தை ஏற்க முடியாது, போர் முழுமையாக முடிவுக்கு வரவேண்டும்: ஈரான் வெளியுறவு அமைச்சர்!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான தற்போதைய இராணுவ மோதல்கள் முடிவுக்கு வர வேண்டுமாயின், வெறும்...

01 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு: குடும்பத் தகராறில் கொலையா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த பெண் ஒருவர், தென்மராட்சி,...