நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்படவுள்ள தாக்கம்!
இலங்கைசெய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்படவுள்ள தாக்கம்!

Share

நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்படவுள்ள தாக்கம்!

நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ள பெரும்போக பயிர்ச்செய்கை வறட்சியினால் பாதிக்கப்படும் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், 2023 ஆம் ஆண்டில் இலங்கை விவசாயிகள் கடினமான ஆண்டை எதிர்கொள்வார்கள் எனவும் ஆங்கில இதழில் தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக உலக விஞ்ஞானிகள் கணித்துள்ள நிலையில், எல் நினோ விளைவு காரணமாக இலங்கையின் பெரும்போக பயிர்ச்செய்கைப் பருவம் வரட்சியின் காரணமாக மோசமாகப் பாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை பலவீனமடையும் நிலை எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக மூத்த விஞ்ஞானி பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் வறட்சி நிலையை ஏற்படுத்தக்கூடிய மழைப்பொழிவு குறைவதை இது குறிக்கும், அத்துடன் இது முக்கிய பெரும்போக பருவத்தில் சாகுபடிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் எல் நினோ விளைவை 1998 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இலங்கை ஏற்கனவே அனுபவித்துள்ளது.

இந்த நிலையில் விவசாய திணைக்களமும் விவசாய அமைச்சும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஒரு திட்டத்தை வகுத்து அடுத்த பெரும் பக்கத்தில் இந்த வறட்சி நிலையை எதிர்கொள்ள தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...