tamilnif 14 scaled
இலங்கைசெய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட சென்னைக்கான விமான சேவை

Share

திடீரென இரத்து செய்யப்பட்ட சென்னைக்கான விமான சேவை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு நேற்று (26.12.2023) காலை பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென இரத்துச் செய்யப்பட்டமையினால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

226 பயணிகளுடன் நேற்று காலை 7.20 மணிக்கு சென்னைக்கு புறப்படவிருந்த U.L என்ற ஸ்ரீலங்கன் விமானமே எந்தவித முன்னறிவிப்புமின்றி பயணத்தினை இரத்து செய்துள்ளது.

இதன் காரணமாக பயணிகள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் முகாமையாளர் தீபால் வி. பெரேரா விளக்கமளிக்கையில்,

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் திடீரென இரத்து செய்யப்பட்டதுடன், பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு வேறு விமானத்தில் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டனர் .

மேலும், இந்த இடையூறுகளுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...