5 13
இலங்கைசெய்திகள்

மாதந்தோறும் தர ஆய்வுக்கு உட்படுத்தப்படபோகும் பேருந்துகள்

Share

நெடுந்தூரப் பேருந்துகள் (100 கிலோமீற்றருக்கு மேல் பயணிக்கும்) மாதந்தோறும் தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இந்த ஆய்வுச் சான்றிதழை சரிபார்ப்புக்காக பேருந்தின் உள்ளே வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை பெஸ்டியன் மாவத்தை பயணிகள் பேருந்து முனையத்தில் 100 கிலோமீற்றருக்கு மேல் பயணிக்கும் பேருந்துகளின் தரத்தை சோதிக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சமீபகாலமாக, பேருந்து விபத்துகள் அதிகரிப்பதும், அவற்றில் பல மோசமான வாகனப் பராமரிப்பு மற்றும் செயல் திறனுடன் தொடர்புடையதாகக் கருதப்படுவதும் குறித்து பொதுமக்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி. ஏ. சந்திரபால தெரிவித்தார்.

தற்போது பேருந்துகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்படும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிக்கடி ஆய்வு செய்வது அவசியம் என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

போக்குவரத்து அமைச்சு, ஒரு சிறப்புக் குழுவின் மூலம் ஒவ்வொரு வாகனத்திலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய முக்கிய அம்சங்களை இறுதி செய்துள்ளது.

இனிமேல், அந்தக் குறித்த பட்டியலின் அடிப்படையில் சான்றளிக்கப்பட்ட நிபுணர்களால் மாதந்தோறும் ஆய்வுகள் நடத்தப்படும்.பேருந்து உரிமையாளர்கள் இந்த ஆய்வுச் சான்றிதழை பேருந்தின் உள்ளே வைத்திருக்க வேண்டும், மேலும் பயணிகள் கோரினால் அதனைப் பார்க்கும் உரிமை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...