பல காலமாக தமிழர் தாயகங்களில் நிலவும் பெளத்த சிங்கள மயமாக்கல் முயற்சிகளுக்கு எதிராக தமிழர் சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராடிக்கொண்டிருக்கிறது.
தமிழர் தாயகங்களில் பெளத்தமயமாக்கலை உள் நுழைக்கும் முயற்சியை இலங்கை பேரினவாத அரசாங்கம் எடுத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் சில விசமத்தனமான செயல்களுக்கு தமிழர்களாகிய நாங்களும் துணை நிற்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
அதாவது வவுனியா குருமன் காடு பிள்ளையார் ஆலய திருவிழாவின் போது சிலரினால் அமைக்கப்பட்டிருந்த தாக சாந்தி நிலையத்தில் காணப்பட்ட பாதாதை ஒன்று பலரை வேதனை கொள்ள வைத்துள்ளது.
இந்து பெளத்த சங்கம்
அந்த பதாதையில், “இந்து பெளத்த சங்கம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியான பெயர்களில், இவ்வாறான பதாதைகளுடன் தாக சாந்தி நிலையங்களை அமைப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது, ஆலய நிர்வாகத்தில் தமிழர்கள் இருக்கின்றனரா என பலர் தமது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
தமிழ் மண்ணை நேசிக்கும் தமிழ் உணர்வாளர்கள் நிச்சயம் இப்படி செய்ய மாட்டார்கள் எனப் பலரும் தமது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரிவித்து வருகின்றனர்.
Leave a comment