2 14
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் மோசடிகள் அம்பலம்

Share

கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் மோசடிகள் அம்பலம்

இலங்கையில் புதிதாக கடவுச்சீட்டு பெறுவது மற்றும் புதுப்பித்துக் கொள்வது என்பது பெரும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது.

இந்நிலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் தற்போது மாதக்கணக்கில் காத்திருந்து அதனை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடவுச்சீட்டு பிரச்சினைக்கு இரண்டு மாதங்களுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் முயன்று வருகிறது.

இந்நிலையில் பெருந்தொகை பணத்தை லஞ்சமாக கொடுத்து அதனை பெற்றுக்கொள்ள வசதியான பலர் முயன்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நாட்டில் பிரபலமான பலர் இலட்சக்கணக்கில் பணத்தை அன்பளிப்பாக கொடுத்து தமது கடவுச்சீட்டுக்களை உடனடியாக பெற்றுக்கொள்வதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரு சிலர் தமது சந்தோஷத்தின் நிமித்தல் சிறிய தொகையிலான பணத்தை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர். எனினும் பெருந்தொகை பணத்தை கொடுத்து முக்கியஸ்தர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

இவ்வாறான நிலையில் இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் பிரச்சினைகள் இரண்டு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...