9 12
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னணியில் சதி – கடும் நெருக்கடியில் அரசியல்வாதிகள்

Share

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னணியில் சதி – கடும் நெருக்கடியில் அரசியல்வாதிகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வழங்குவதில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.

தற்போதைய கடவுச்சீட்டு பற்றாக்குறையானது இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் கடவுச்சீட்டு பெற வருபவர்கள் ஒரு கிலோ மீற்றர் வரை வரிசையில் நிற்கின்றனர் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விசாரணைகளுக்கமைய, நாளொன்றுக்கு சுமார் 3000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும். அடுத்த வருடமும் தற்போதுள்ள கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என பற்றாக்குறை இருப்பதாக பாசாங்கு செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் ஆகியோர் இது தொடர்பில் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தொழில் பயணம் என்ற போர்வையில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலுவலகம் அருகே நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் மிகவும் கோபமடைந்துள்ளதாகவும், இதனால் கடும் பாதுகாப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பான விசாரணையில் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளதால், இதற்கு காரணமானவர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...