9 12
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னணியில் சதி – கடும் நெருக்கடியில் அரசியல்வாதிகள்

Share

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னணியில் சதி – கடும் நெருக்கடியில் அரசியல்வாதிகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வழங்குவதில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.

தற்போதைய கடவுச்சீட்டு பற்றாக்குறையானது இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் கடவுச்சீட்டு பெற வருபவர்கள் ஒரு கிலோ மீற்றர் வரை வரிசையில் நிற்கின்றனர் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விசாரணைகளுக்கமைய, நாளொன்றுக்கு சுமார் 3000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும். அடுத்த வருடமும் தற்போதுள்ள கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என பற்றாக்குறை இருப்பதாக பாசாங்கு செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் ஆகியோர் இது தொடர்பில் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தொழில் பயணம் என்ற போர்வையில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலுவலகம் அருகே நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் மிகவும் கோபமடைந்துள்ளதாகவும், இதனால் கடும் பாதுகாப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பான விசாரணையில் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளதால், இதற்கு காரணமானவர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...