24 6621f0a7d3817
இலங்கைசெய்திகள்

மியன்மாரிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள்

Share

மியன்மாரிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள்

மியன்மாரில் (Myanmar) சைபர் மோசடி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள எட்டு இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த எட்டுப் பேரும் நேற்று (18.04.2024) பாதுகாப்பான முறையில் கட்டுநாயக்க விமான நிலையம் (Bandaranaike Airport) ஊடாக நாடு திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 100 பேர் மியன்மாரின் எல்லைப்புறப் பகுதியில் சைபர் மோசடி முகாம்களில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் பெரும் பணம் கொடுத்து அங்கிருந்து தப்பி வந்துள்ளனர்.

இந்நிலையில் மியன்மார் அரச, இராணுவ ஒத்துழைப்புடன் அண்மையில் எட்டுப் பேர் மீட்கப்பட்டு, தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்பியுள்ளனர்.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...