24 6621f0a7d3817
இலங்கைசெய்திகள்

மியன்மாரிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள்

Share

மியன்மாரிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள்

மியன்மாரில் (Myanmar) சைபர் மோசடி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள எட்டு இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த எட்டுப் பேரும் நேற்று (18.04.2024) பாதுகாப்பான முறையில் கட்டுநாயக்க விமான நிலையம் (Bandaranaike Airport) ஊடாக நாடு திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 100 பேர் மியன்மாரின் எல்லைப்புறப் பகுதியில் சைபர் மோசடி முகாம்களில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் பெரும் பணம் கொடுத்து அங்கிருந்து தப்பி வந்துள்ளனர்.

இந்நிலையில் மியன்மார் அரச, இராணுவ ஒத்துழைப்புடன் அண்மையில் எட்டுப் பேர் மீட்கப்பட்டு, தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்பியுள்ளனர்.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...