24 6621f0a7d3817
இலங்கைசெய்திகள்

மியன்மாரிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள்

Share

மியன்மாரிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள்

மியன்மாரில் (Myanmar) சைபர் மோசடி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள எட்டு இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த எட்டுப் பேரும் நேற்று (18.04.2024) பாதுகாப்பான முறையில் கட்டுநாயக்க விமான நிலையம் (Bandaranaike Airport) ஊடாக நாடு திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 100 பேர் மியன்மாரின் எல்லைப்புறப் பகுதியில் சைபர் மோசடி முகாம்களில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் பெரும் பணம் கொடுத்து அங்கிருந்து தப்பி வந்துள்ளனர்.

இந்நிலையில் மியன்மார் அரச, இராணுவ ஒத்துழைப்புடன் அண்மையில் எட்டுப் பேர் மீட்கப்பட்டு, தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்பியுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...