24 6646aef3a1f3c
இலங்கைசெய்திகள்

ரஷ்ய – உக்ரைன் போரின் நடுவில் இலங்கையர்கள்: ஜனாதிபதி அவசர பணிப்புரை

Share

ரஷ்ய – உக்ரைன் போரின் நடுவில் இலங்கையர்கள்: ஜனாதிபதி அவசர பணிப்புரை

ரஷ்ய – உக்ரைன் போரின் நடுவில் இருக்கும் இலங்கையர்களை விசாரிப்பதற்காக விசேட குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று உடனடியாக ரஷ்யாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (16) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் இணைந்து ரஷ்ய – உக்ரைன் போருக்கு மத்தியில் இருக்கும் இலங்கையர்களின் கணக்கெடுப்பை நடத்தி வருகின்றன.

சுற்றுலா விசாவில் இலங்கையர்கள் சிலர் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நாட்டின் முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவிற்கு எத்தனை பேர் சென்றிருக்கிறார்கள் என்பது முக்கிய பிரச்சினையாகவுள்ளதுடன், அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களின்படி, ரஷ்யாவில் 600-800 க்கு இடையில் இலங்கையர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.

எவ்வாறாயினும், அரசாங்கம் என்ற வகையில், நாட்டின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய ஒவ்வொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரஷ்யாவில் போரில் ஈடுபட்ட இலங்கையர்கள் பற்றி தகவல் தெரிவித்த ஊடக நிறுவனங்களுக்கு சிறப்பு நன்றி. மேலும், இவர்கள் ரஷ்யாவில் தங்கியிருக்கும் பகுதிகள் குறித்த தகவல்கள் இல்லாததால் சில சிக்கல்கள் உள்ளன

ரஷ்ய குடியுரிமை வழங்குவது போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து கடத்தல்காரர்கள் இவர்களை ரஷ்யாவிற்கு அழைத்து சென்றுள்ளதாக எமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது முற்றிலும் மனித கடத்தல். இந்த கடத்தலில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையான நிலைமையை சுட்டிக்காட்டி ரஷ்யாவிற்கு ஆட்களை அனுப்புவது நிறுத்தப்பட வேண்டும். அதன் பின்னர், அங்கு சென்றுள்ளவர்கள் இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என நம்பப்படுகிறது.

அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டில் இருந்தாலும் ரஷ்ய – உக்ரைன் போரின் நடுவே இருக்கும் இலங்கையர்கள் குறித்து விசாரணை நடத்த தூதுக்குழுவொன்றை ரஷ்யாவுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று ரஷ்யாவுக்கு அனுப்பப்படவுள்ளது. இது குறித்து ரஷ்ய தூதரகத்துக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...