24 666113c8983ce
இலங்கைசெய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள்: மறுக்கும் இலங்கை அதிகாரிகள்

Share

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள்: மறுக்கும் இலங்கை அதிகாரிகள்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த 6 சந்தேகநபர்களை போதைக்கு அடிமையானவர்கள் எனவும் அவர்களை நாசகார செயலுக்கு பயன்படுத்த முயன்றார்களா என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களை அபு என்ற நபரே வழிநடத்தியதாக கூறப்பட்டாலும், அவ்வாறானதொரு சந்தேகநபர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது.

இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என இந்திய பொலிஸார் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தாக்குதல் நடத்த வந்ததாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்திருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், இந்தியாவில் பிடிபட்ட இலங்கையர்களுடன் தொடர்பில் இருந்த 6 பேரை ஹலவத்தை, மாவனல்லை, கொழும்பு பிரதேசங்களில் வைத்து கைது செய்திருந்தனர்.

குறித்த 6 பேர் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...